அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் சுசீந்திரம்
தாணுமாலயன் கோயில் சுசீந்திரம் ( சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) )
( தாணு + மால் + அயன் = தாணுமாலயன் )
இக்கோயில் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது
இக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றாக அமைந்துள்ளனர். ஊர் மிகவும் செழிப்பான ஊர் இந்த கோவிலில் பெரிய ராஜகோபுரம் தெப்பக்குளம் ஆகிய பழமைவாய்ந்த கோயிலுக்கான அடையாளங்களோடு சிவன் பிரம்மா விஷ்ணு மூவருக்குமான கோவிலாகத் திகழ்கிறது
அத்திரி முனிவருக்கும் அனுசுயாவுக்கும் சிவன் பிரம்மா விஷ்ணு காட்சி கொடுத்த இடம் சுசீந்திரம்.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் வந்து மும்மூர்த்திகளை வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் சுசீந்திரம்.
சுசீந்திரம் நாகர்கோவிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் ( 7 Km ) ஏழாவது
கி மீ – ல் அமைந்துள்ளது
தாணுமாலய சுவாமி கோவில் காலை 4 am மணி முதல் மதியம் 11 am மணி வரை மற்றும் மாலை மாலை 4 pm மணி முதல் இரவு 8,30 pm மணி வரை திறந்திருக்கும்
தாணுமாலய சாமி கோவில் தரிசனம் செய்யும் முறை
முதலில் தட்சிணாமூர்த்தியை வணங்கி விட்டு நீலகண்ட விநாயகரையும் , நவக்கிரகங்களையும் வணங்கிவிட்டு கொன்றையடி வணங்கி விட்டு மூலஸ்தானம் செல்ல வேண்டும் பின்பு விண்ணவரும் பெருமாளை வணங்க வேண்டும் பின்பு கங்காள நாதர் வணங்கிவிட்டு கைலாச நாதரை வணங்கி விட்டு சேரவாதல் சாஸ்தாவை வணங்க வேண்டும் ஸ்ரீ ராமர் சீதை பின்பு மகாதேவரை வணங்கிவிட்டு அறம் வளர்த்த அம்மாவின் தரிசனம் பண்ண வேண்டும் பின்பு ராமேஸ்வரத்து மகாதேவரை வணங்கிவிட்டு ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சக்கரம் ஜெயந்தீசுவர மகாதேவர் துர்க்கை அம்மன் சுப்பிரமணியர் கால பைரவர் வணங்கிவிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயர் தரிசனத்தை முடித்துவிட்டு நடராஜர் இந்திர விநாயகர் வணங்கி முடிக்கலாம்
மேலும் இத்திருக்கோயிலை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் உதாரணமாக தரிசன நேரம் எப்படி, தரிசனம் செய்வது எப்படி இந்த கோயிலை எப்படி வந்தடைவது சுசீந்திரத்தில் வேறு என்னென்ன திருத்தங்கள் உள்ளது, இங்கிருந்து வேறு எந்த கோயிலில் செல்லலாம் என்ற விபரங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால் என்னுடைய இமெயில் முகவரி, மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். கமெண்ட்டில் கேட்க்கலாம்
மேலும் இந்த கோவிலில் பார்க்கிங் வசதி மிகச் சிறப்பாக உள்ளது
டீ காபி சாப்பிடுவதற்கு, சாப்பாடு சாப்பிடுவதற்கு வசதியாக ஹோட்டல்கள் உள்ளன
இங்கிருந்து வேறு இடங்களுக்கு நீங்கள் செல்ல வாகன வசதிகள் உள்ளது
நகரின் முக்கிய பகுதியில் இருந்து இங்கு பேருந்து வசதி உள்ளது
அரசு பேருந்து வசதி உள்ளது

