Categories
Kanyakumari District Temples

அருள்மிகு களியங்காடு சிவபுரம் சிவன் கோவில் நாகர்கோவில்

அருள்மிகு களியங்காடு சிவபுரம் சிவன் கோவில் நாகர்கோவில்

மார்த்தாண்ட வர்மா அவர்களின் ஆட்சி காலத்தில் அந்த மன்னர் இந்த வழியாக வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரிகள் அவரை கொலை செய்ய துரத்தி சென்றனர் அப்பொழுது அவரை இந்த சிவன் கோவிலில் உள்ள அதாவது சிவபுரம் சிவன் கோவிலில் உள்ள அர்ச்சகர் அவரது உடைகளை அரசருக்கு கொடுத்து அரசரை காப்பாற்றி திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார் பின்பு மன்னருடைய உடையில் இருந்த அர்ச்சகரை  துரத்தி வந்த கும்பல் கொலை செய்தது.  இது மன்னருக்கு பின்பு தெரிந்து கொஞ்சம் இடத்தை கோவிலுக்கு கொடுத்ததாக  செவிவழி  வரலாறு  சொல்லுகிறது ,இந்த கோவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பார்வதிபுரத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலானது தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் புதிய தங்க நாற்கரச்சாலை முகப்பில் அமைந்துள்ளது இந்த கோவிலில் சிவன் தாய் மீனாட்சி கணபதி  நாகர்  தட்சிணாமூர்த்தி  பாலமுருகன்  ஐயப்பன்  மகாவிஷ்ணு நாராயணர்  சண்டிகேஸ்வரர் நவக்கிரகங்கள்  கால பைரவர் சன்னதி  கால பைரவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது இந்த கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடக்கிறது மற்றும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் எல்லா தெய்வங்களுக்கும் அந்தந்த முக்கிய தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது கோவிலின் முன்பு அழகான தெப்பகுளம் அமைந்துள்ளது இந்த கோவில் தற்போது புனரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது இந்த கோவில் நாகபுஷ்பம் வில்வம் ஆகிய தலவிருட்சங்கள் அடங்கியுள்ளது

இது நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் களியங்காடு அருகே உள்ள சிவபுரத்தில் அமைந்துள்ளது

இத்திருக்கோவில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

5 replies on “அருள்மிகு களியங்காடு சிவபுரம் சிவன் கோவில் நாகர்கோவில்”

இந்த கோவில் நாகர்கோவிலில் இருந்து எத்தனை கிலோமீட்டர் ?

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 1 கிலோமீட்டர் தூரத்தில் வலது பக்கத்தில் பார்வதிபுரம் அருகில் உள்ளது

மேலும் தகவல் தேவைப்பட்டால் கேட்கலாம்

Leave a Reply

Your email address will not be published.