அருள்மிகு ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் கோவில், சுசீந்திரம்


ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
அருள்மிகு ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் கோவில் சுசீந்திரம். இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இந்த கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் சுசீந்திரம் ஊரில் வலதுபுறம் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவில் நாகர்கோவிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மூலவர் கிருஷ்ணன் சுவாமி. இந்த திருக்கோவிலில் கணபதி மூலஸ்தானமும், சாஸ்தா மூலஸ்தானமும், நாராயணர் மூலஸ்தானமும், அமைந்துள்ளது இங்கு தினசரி பூஜை நடைபெறும்.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடை திறந்திருக்கும்
திருக்கோயில் உடைய தொலைபேசி எண் 04652 – 329528