Categories
Kanyakumari District Temples

அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமிகள் திருக்கோவில், பொத்தயடி,மருந்துவாழ்மலை

அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமிகள் திருக்கோவில், பொத்தயடி,மருந்துவாழ்மலை

அருள்மிகு ஸ்ரீ நயினார் சுவாமிகள் திருக்கோவில் மருந்துவாழ்மலை திருக்கோவில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் பொத்தயடி என்னும் கிராமத்தில் மருந்துவாழ் அடிவாரத்தில் வைகுண்டபதி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது .இந்தக் கோவில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பபரப்பில் அமைந்துள்ளது
ரிஷிமூலம் நதிமூலம் அறிய முடியாதது போல் ஸ்வாமிகள் எங்கிருந்து வந்தவர்கள் எந்த ஊர் எந்த பெயர் என்ன ஜாதி என்ன மதம் என்று எதுவுமே தெரியாது

இந்த கோவில் நிர்வாகி தூத்துக்குடி மாவட்டம்  திரு ராஜமாணிக்கம் ஐயா அவர்கள்.
ராஜமாணிக்கம் அய்யா அவர்கள் கன்னியாகுமரியில் வாழ்ந்த ஸ்ரீ மாயம்மா அவர்களை தரிசனம் செய்வதற்காக வந்திருந்த நேரம், ஸ்ரீ மாயம்மா அவர்கள் ராஜமாணிக்கம் ஐயாவிடம் காரை எடு நான் உன்னை வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி அய்யாவோடு வைகுண்டபதி கோயிலுக்கு வந்து ஸ்ரீ நயினார் சுவாமியை ராஜமாணிக்கம் ஐயாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இந்த சம்பவத்திற்கு பிறகு திரு ராஜமாணிக்கம் அய்யா அவர்கள் ஆஞ்சநேயா அவதாரம் கொண்ட  சுவாமி ஸ்ரீ நயினார் சுவாமியை அடிக்கடி பார்ப்பதற்கு வந்தார். காலப்போக்கில் சுவாமியின் மகிமையை உலகத்தார் அறிந்து கொண்டு வழிபட ஆரம்பித்தனர்.

காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை நடை திறந்திருக்கும்

Categories
Kanyakumari District Temples

அருள்மிகு ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் கோவில், சுசீந்திரம்

அருள்மிகு ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் கோவில், சுசீந்திரம்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

அருள்மிகு ஸ்ரீ துவாரகை கிருஷ்ணன் கோவில் சுசீந்திரம். இந்த திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இந்த கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் சுசீந்திரம் ஊரில் வலதுபுறம் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவில் நாகர்கோவிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மூலவர் கிருஷ்ணன் சுவாமி. இந்த திருக்கோவிலில் கணபதி மூலஸ்தானமும், சாஸ்தா மூலஸ்தானமும், நாராயணர் மூலஸ்தானமும், அமைந்துள்ளது இங்கு தினசரி பூஜை நடைபெறும்.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடை திறந்திருக்கும்
திருக்கோயில் உடைய தொலைபேசி எண் 04652 – 329528

Categories
Kanyakumari District Temples

அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில்

நாகர்கோவிலில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் வலது புறம் அமைந்துள்ளது. தக்கலையில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

அருள்மிகு மண்டைக்காடு அம்மன் திருக்கோவிலில் சாதி மத பேதம் எதுவும் இல்லாமல் பக்தர்கள் தினம் தினம் எல்லா ஊர்களிலிருந்தும் வந்து வழிபட்டு வருகிறார்கள். இந்த திருக்கோவிலில் உள்ள அம்மன் தாமாகவே தோன்றிய அம்மன், இந்த அம்மன் சுயம்புவாக எழுந்தருளி அம்மன்.இது பெண்களின் சபரிமலை ஆகும். இந்த கோவிலுக்கு பெண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப் பயணமாக வருகிறார்கள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மண்டைக்காடு அம்மனை வேண்டியபடியே இங்குள்ள கடலில் புனித தீர்த்தம் ஆடி வணங்குவார்கள். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் திருவிழா மாசி மாதம்  நடைபெறும். பத்தாம் நாள் திருவிழா அன்று இரவு 12 மணிக்கு  ஒடுக்கு பூஜை நடக்கும், அந்த ஒடுக்கு பூஜையில் பலவகை நைவேத்தியங்களை அம்மனுக்கு படைப்பார்கள், இந்த நைவேத்தியங்களை கோவிலுக்கு அருகே அமைந்துள்ள சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்படும், இங்கு தயாரிக்கப்பட்ட நைவேத்தியங்களை ஓலைப்பெட்டிகளில் மேளங்கள் முழங்க தாய் மண்டைக்காடு அம்மன் சந்நிதிக்கு எடுத்துவரப்படும், அம்மனுக்கு பின்பு படைக்கப்பட்டு அந்த பிரசாதங்கள் பக்தர்களுக்கு நெய்வேத்தியமாக வழங்கப்படும்

அதிகாலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

காலை 6 மணி, மதியம் 12:30 மணி, மாலை 6 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறும்